Thursday, April 2, 2009

10 நொடிகளில் மொபைலை சார்ஜ் செய்யலாம்



தற்போது புழக்கத்தில் உள்ள மொபைல்கள் தொடர்பான பெரிய புகாரே, போனின் பேட்டரியை அன்றாடம் அரைமணி நேரமாவது சார்ஜ் செய்தால் தான் நிம்மதியாக பயன்படுத்த முடியும் என்பது தான். அமெரிக்காவின் மாசசூசட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி யின் விஞ்ஞானிகள், 10 நொடிகளில் மொபைலை சார்ஜ் செய்திட முடியும் என்று நிரூபித்துள்ளனர். தற்போது புழக்கத்தில் உள்ள பேட்டரிகளில் சார்ஜ் செய்யப்படும் போது, எலக்ட்ரான்கள் மெதுவாக கடத்தப்படுகின்றன. பொருட்களில் உள்ள சில பாதைகளில் அயனிகள் வேகமாக நகர்வதை இந்த விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இதன் அடிப்படையில் வேகமாக சார்ஜ் செய்ய முடியும் என்பதை நிரூபித்துள்ளனர்.

நன்றி : தினமலர் 

No comments: