
இயற்கை ! உலகின் பல பாகங்களில் இயற்கை பல விதங்களில் வெளிப்படுத்தி உள்ளது .இந்தியாவின் வட மாநிலங்களில் இதை காணலாம் .குறிப்பாக ஹிமாச்சல் பிரதேஷை சொல்லலாம் . இங்கு ஜ்வாலாமுகி என்ற தலம் உள்ளது . , இங்கு தீ சுடரை வழிபடுவது விசேஷம் ஆகும் .இங்கு இயற்கையாக ( மலைகளின் பிளவில் ) எரிவாயு சிறிதளவு உற்பத்தி ஆகிறது .இதை அங்குள்ள பூசாரி தீயின் மூலம் எரிக்கிறார் .பக்தர்களின் வழிபாட்டிற்கு பிறகு நீரினால் அணைத்து ஒரு குழுவை அனுப்புகிறார் .பிறகு அடுத்த குழுவை ( 10 பேர் ) அனுமதிக்கிறார் .ஏனெனில் சிறிய அளவு வாயுதான் அங்கு தயார் ஆகிறது .மேலும் இதே மாநிலத்தில் அவ்வளவு பனியிலும் வென்னீர் உற்றுகள் உற்பத்தி ஆவது பலருக்கு தெரியும் .என்னே இயற்கையின் விந்தை !

1 comment:
Post a Comment